
திருப்புவனம்: “காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகிறது. இந்நிலை நீடித்தால் திமுக ஆட்சி வீழ்ச்சியை எட்டுவது உறுதி” என முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது: “காவல்துறை சட்டப்படி செயல்படாமல் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ளார்.