
திருச்சி: “தவெக செயற்குழு கூட்டத்தில் அதிமுக பற்றி விஜய் எதுவும் சொல்லவில்லை. அதிமுகவை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியின் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பதை தேசிய அளவிலான பார்வையுடன் கூடிய கருத்தாக பார்க்கிறேன். தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரள வேண்டும்.