• July 5, 2025
  • NewsEditor
  • 0

முன்பு நாம் எழுதி இருந்தபடியே சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுக கவுனசிலர்களுடன் கூட்டணி போட்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த 2-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றிபெற்று உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்திருக்கிறார்.

மொத்​தம் 30 வார்​டு​களைக் கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் திமுக வென்​றது 9 வார்​டு​களை மட்​டும் தான். 12 வார்​டு​களை அதி​முக வென்​றிருந்​தது. எஞ்​சிய வார்​டு​களை கூட்​ட​ணிக் கட்​சிகளும் சுயேச்​சைகளும் கைப்​பற்​றினர். இதனால் சேர்​மன் தேர்​தலில் திமுக-​வும் அதி​முக-​வும் தலா 15 வாக்​கு​களைப் பெற்​றன. இதையடுத்து நடந்த அதிர்​ஷ்ட குலுக்​கலில் திமுக-​வின் உமா மகேஸ்​வரி சேர்​ம​னா​னார். அதேசம​யம், அதி​முக-வைச் சேர்ந்த கண்​ணன் (எ) ராஜு 16 வாக்​கு​களைப் பெற்று திமுக-வை தோற்​கடித்து வைஸ் சேர்​ம​னா​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *