
புதுடெல்லி: பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப்-35பி ரக விமானம் கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 19 நாட்களுக்கு முன்பு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதி நவீன போர் விமானமாக கருதப்படும் இது உலகின் மிகவும் அதிகபட்ச விலையுடைய விமானமாக கருதப்படுகிறது. ஒரு விமானத்தின் விலை 110 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.924 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எப்-35பி விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதையடுத்து அதனை சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் மூலமாக மீண்டும் பிரிட்டனுக்கே கொண்டு செல்ல பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எப்-35பி விமானத்தை சரக்கு விமானத்தில் ஏற்ற வேண்டுமானால் அதற்கு லாக்ஹீட் மார்டினில் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மட்டுமே அதனை செய்து முடிக்க முடியும்.