• July 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது:

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​படும் தீவிர​வாத முகாம்​களை அழிக்க முடிவு செய்​யப்​பட்​டது. முதலில் 21 தீவிர​வாத முகாம்​கள் அடை​யாளம் காணப்​பட்​டன. கடைசி நேரத்​தில் 9 முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. அந்த முகாம்​கள் துல்​லிய தாக்​குதல்​கள் மூலம் முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *