
சென்னை: திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக விசிக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸ் குறித்த விசிக நிர்வாகியின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூலம் திமுக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பிறகு , "2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.