• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பலர் தாமாக முன்வந்து அன்னதானம் வழங்குகின்றனர். இதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக நாளில் முருகனைத் தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பேருந்து வசதி, குடிநீர், கழிப்பிடம் வசதி, பாதுகாப்பான தரிசனம், பேருந்து வசதி, பார்க்கிங் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அறநிலையத் துறை ஏற்படுத்தித் தர முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *