
சென்னை: ”அதிமுகவுடன் ஒன்றிணைந்தே இனி போராட்டங்களை நடத்துவோம், பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பாஜகவும் பங்கேற்கும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை முகப்பேரில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. தலைமைச் செயலகத்தில் யாரோ ஒருவர் கொடுத்த உத்தரவின் பேரில் திருப்புவனத்தில் அஜித்குமாரை காவல் துறையினர் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.