• July 4, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழக காவல்துறையில் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஓ.ஹோமர்லால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக கைது செய்யப்படாமல் உள்ளனர். முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதில்லை. இதற்கு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் உறவினர்களாகவும், நண்பர்களாகவும் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *