
புனே: தன்னாட்சியை பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆபரேஷன் சிந்தூர் என அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மராட்டிய பேஷ்வா (பிரதம அமைச்சர்) முதலாம் பாஜிராவின் சிலையை மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் திறந்து வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாஜிராவின் சிலையை நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான இடம், இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி. ஏனெனில் இங்குதான் ராணுவத் தலைமைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.