
திருப்பூர்: அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், மாமியார் சித்ராதேவி இன்று (ஜூலை 4) கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், ரிதன்யா கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்.