
சிவகங்கை: “சிபிஐ விசாரணை வழக்கை தாமதப்படுத்தும் என்பதால் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை தான் வேண்டும்,” என அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நீதிபதி 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே அஜித்குமார் குடும்பத்தினரை மிரட்டி பேரம் பேசியதாக புகார் எழுந்தது.