
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநரில் இன்று நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஸ்ரீநகரில் இன்று (ஜூலை 4) மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய ஆதரவு கோஷங்கள் மற்றும் ஈரான் ஆதரவு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.