• July 4, 2025
  • NewsEditor
  • 0

பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர்.

பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023-ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அது 2024 வரை நீட்டிகப்பட்டது. பாஜக மூன்றாவது இன்னிங்ஸின் ஓராண்டே முடிந்துவிட்ட நிலையில் தான் கட்சிக்கு புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்வது தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதிலும், பாஜக தேசியத் தலைவராக ஒரு பெண் ஆளுமையை நியமித்து வரலாறு படைக்க ஆர்எஸ்எஸ் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், இந்தத் தேர்வு பரபரப்பை கூட்டியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *