
அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
2021-ல் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக சர்ச்சை வெடித்து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது. அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன், கருப்பர் கூட்டத்தின் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தினார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இதற்கு கெடுபிடிகளை தந்த போதும் வேல் யாத்திரை மூலம் முருக பக்தர்களை ஓரணியில் திரட்டியது பாஜக.