• July 4, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்​க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி​யில் முன்​னாள் மாணவர் மற்​றும் 2 சீனியர் மாணவர்​களால் 24 வயது மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட சம்​பவம் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் 3 பொதுநல வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​கள் நீதிபதி சவுமன் சென் தலை​மையி​லான அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது வழக்​கில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து பிர​மாண பத்​திர​மும் கேஸ் டைரியை​யும் ஜூலை 10-ம் தேதி அடுத்த விசா​ரணை நாளுக்​குள் தாக்​கல் செய்ய மேற்​கு வங்​க அரசுக்​கு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *