
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர் உட்பட முழு விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்கள் 5,000 பேர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் முசாபர்நகரின் ‘பண்டிட்ஜி வைஷ்னோவ் தாபா’வை முஸ்லிம்கள் நடத்துவதாக கண்டுபிடித்தனர். அப்போது, அங்கு வேலை செய்தவர்களின் கீழாடைகளை அகற்றி சோதித்தனர். இது பெரும் சர்ச்சையானது. ஆனால், அங்கு வேலை செய்யும் ஒருவர் நேற்று உண்மையை வெளியிட்டுள்ளார்.