
ராஞ்சி: ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி வரையிலான 23 கி.மீ. நீளத்துக்கு, ரூ.1,130 கோடி செலவில் புதிதாக 4 வழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுபோல, சத்தீஸ்கர், ஜார்க்கண்டை இணைக்கும் என்எச் 39-ல் 32 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,330 கோடி செலவில் 4 வழி சாலை அமைப்பதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.