• July 4, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்​குமாரை போலீ​ஸார் தாக்​கியதை வீடியோ எடுத்​தவருக்கு ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் காவலா​ளி​யாகப் பணிபுரிந்த அஜித்​கு​மார் (29), நகை திருட்டு புகாரின்​பேரில் தனிப்​படை போலீ​ஸாரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது உயி​ரிழந்​தார். கோயில் பின்​புற​முள்ள மாட்​டுத் தொழு​வத்​தில் அஜித்​கு​மாரை, தனிப்​படை போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கு​வதை கோயில் பணி​யாளர் சக்​தீஸ்​வரன், கழி​வறை​யில் மறைந்​திருந்து வீடியோ எடுத்​தார். இதனால் அவர் இவ்​வழக்​கில் நேரடி சாட்​சி​யாக உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *