
சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார் (29), நகை திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது உயிரிழந்தார். கோயில் பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் கடுமையாக தாக்குவதை கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கழிவறையில் மறைந்திருந்து வீடியோ எடுத்தார். இதனால் அவர் இவ்வழக்கில் நேரடி சாட்சியாக உள்ளார்.