
விழுப்புரம்: அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்ககளிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தெடுக்க ‘level up’ என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம். இத்திட்டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்த வேண்டும்.