• July 4, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் காவல் துறை​யினரின் அத்​து​மீறல்​கள் தொடர்​கின்​றன. அதி​முக ஆட்​சி​யில் ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச் சூட்​டில் தொடர்​புடைய யாரும் இது​வரை தண்​டிக்​கப்​பட​வில்​லை. திமுக ஆட்​சி​யிலும் காவல் துறை அத்​து​மீறல்​கள், மனித உரிமை மீறல்​கள், காட்​டுமி​ராண்​டித்​தன​மான தாக்​குதல்​கள் தொடர்​கின்​றன. காவல் நிலைய உயி​ரிழப்​பு​கள் தொடர்​பாக தமிழக அரசு விசா​ரித்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

திமுக ஆட்​சி​யில் 24 காவல் நிலைய இறப்​பு​கள் நடந்​துள்​ளன. தலை​மைச் செயல​கத்​திலிருந்து யாரோ ஒரு​வர் கொடுத்த அழுத்​தத்​தில்​தான் அஜித்​கு​மார் கொலைச் சம்​பவம் நடந்​துள்​ளது என்று எல்​லோரும் பேசுகின்​றனர். ஆனால், யார் அந்த ஐஏஎஸ் அதி​காரி என வெளிப்​படை​யாக அறிவிக்​க​வில்​லை, மூடிமறைக்​கப் பார்க்​கி்ன்​றனர். யார் அந்த அதி​காரி என்​பதை வெளிப்​படை​யாக அறிவிக்க வேண்​டும். நிகி​தா​வும், அவரது தாயாரும் யாருடைய காரில் கோயிலுக்கு வந்​தார்​கள் என்ற விவரத்​தை​யும் வெளி​யிட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *