
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ கட்சி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்புக்காக, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். இதேபோல், தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பொதுமக்களைச் சந்தித்து அரசின் திட்டங்களை விளக்கியதுடன், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு 2026-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் திமுக 7-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இதற்காக பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது.