• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மின்​வாரி​யத்​துக்கு டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான புகார் மீது வழக்​குப்​ப​திவு செய்ய அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக ஒரு வாரத்​தில் முடிவு எடுக்​கப்​படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது.

கடந்த 2021- 23 கால​கட்​டத்​தில் தமிழக மின்​வாரி​யத்​துக்கு 45,800 டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்​சத்​துக்கு டெண்​டர் கோரப்​பட்​டது. இந்த டெண்​டர் மூலம் ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு லாபம் கிடைக்​கச் செய்​து, அதன்​மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸாரிடம் புகார் அளித்தும் சம்​பந்​தப்​பட்ட துறை​யின் அமைச்​ச​ராக பதவி வகித்த செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை எனக்​கூறி அறப்​போர் இயக்​கம் சார்​பில் சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *