
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கி கொலை செய்தது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பான விசாரணையின்போது தனிப்படை போலீஸார் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.