
சென்னை: நீட் தேர்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அன்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தங்களால் சரியாக தேர்வு எழுத முடியாததால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 பேர், பிற மையங்களில் தேர்வு எழுதிய 3 பேர் என மொத்தம் 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.