• July 3, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை தவெக தலைவர் விஜய் சந்​தித்து ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்து ஆறு​தல் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்த பத்​திர​காளி கோயில் ஒப்​பந்த காவலாளி அஜித்​கு​மார் (29), இவரை தங்​கநகை திருட்டு தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யில் தாக்​கிய​தில் ஜூன் 29-ம் தேதி உயி​ரிழந்​தார்.

இச்​சம்​பவம் தமிழகம் முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. காவல்​நிலைய மரண சம்​பவத்தை கண்​டித்​தும் நீதி கேட்​டும் தவெக சார்​பில் ஜூன் 3-ல் சென்​னை​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வ​தாக அறி​வித்​தனர். இந்நிலையில், நேற்று தவெக தலை​வர் விஜய் மடப்​புரத்​தில் உள்ள அஜித்​கு​மார் வீட்​டுக்குசென்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *