
சென்னை: கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும் உளுந்தூர்பேட்டை பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின. 2 கார்களும் லேசாக சேத மடைந்தன.
மறுநாள் காட்டாங்கொளத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆதீனம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டினார். இதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்தது.