• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “சேலத்தில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய மணல் கொள்ளை ரவுடிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு வேண்டும்.” என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகம் முழுக்க நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும். மணல் கொள்ளையர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து, அவர்களின் சொத்துக்களை சட்டரீதியாக கையகப்படுத்தி மணல் கொள்ளைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *