
அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காத்தி’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாவதாக இருந்த படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.