
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.