• July 3, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: ‘​போலீஸ் விசா​ரணை​யில் அஜித்​கு​மார் கொலை​யான சம்​பவம் அரச பயங்​கர​வாதம்’ என விடு​தலை சிறுத்தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் ஆறு​தல் கூறி​னார். தொடர்ந்து அஜித்​கு​மாரின் புகைப்​படத்​துக்கு மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்து கொலை செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது. 5 காவலர்​களைக் கைது செய்​தது ஆறு​தல் அளிக்​கிறது என்​றாலும், இச்​சம்​பவம் ஆறாத் துயரம். காவல்​துறை விசா​ரணை​யில் படு​கொலை செய்​யப்​படு​வது தொடர்​கதை​யாக நீடிக்​கிறது. தமிழகம் மட்​டுமல்ல; இந்​தியா முழு​வதும் இந்த நிலை​தான் உள்​ளது. முதல்​வர் தலை​யிட்டு நடவடிக்கை எடுத்​தது ஆறு​தலைத் தரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *