
சென்னை: வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரையின் மகளுக்கும், கவின்குமார் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், அப்போது கொடுக்கப்பட்ட 300 பவுன் வரதட்சணை போதாது, 500 பவுன் வேண்டும் என கணவர் கவின்குமாரின் குடும்பத்தார் மனப்பெண்ணை பேராசைக்காக துன்புறுத்தியுள்ளனர்.