• July 3, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.

நேரு​வின் சொந்த ஊரை உள்​ளடக்​கிய லால்​குடி தொகு​திக்கு எம்​எல் ஏ-வாக இருக்​கும் சவுந்​தர​பாண்​டியன், “எனது தொகு​திக்​குள் நடக்​கும் நிகழ்ச்​சிகளுக்கு கூட அதி​காரி​கள் என்னை அழைக்​கப் பயப்​படு​கி​றார்​கள். அதற்​குக் காரணம் அமைச்​சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்​கப்​பட்​டார். இந்​தப் பஞ்​சா​யத்து அறி​வால​யம் வரைக்​கும் போய் சமா​தானம் செய்​து​வைக்​கப்​பட்ட பிறகும் சவுந்​தர​பாண்​டியன் – நேரு சச்​சர​வு​கள் முடிவுக்கு வந்​த​பாடில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *