
‘ரூல் கர்வ்’ முறையினால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரிநீர் கேரளப் பகுதிக்கு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கனமழை பெய்தும் தண்ணீரை அணையில் சேமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக 1979-ம் ஆண்டு கேரளாவில் வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. பின்பு உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் உத்தரவிட்டது. ஆனாலும் அணையில் தமிழ்நாடு சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.