• July 2, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: சங்கரன்கோவிலில் நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. வாக்கெடுப்பில் 28 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளை கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 9 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *