
திருப்புவனம்: போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் அவர் வழங்கினார்.
முன்னதாக நேற்று அஜித்குமாரின் தாய், சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான வீடியோவையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.