
புதுடெல்லி: ஜாம்பியாவில் நிலத்துக்கு அடியில் இருக்கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்களை ஆராய புவியியலாளர் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: எரிசக்தி மாற்றத்துக்கு அவசியமான முக்கிய கனிமங்களை பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்தியாவுக்கு ஜாம்பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்புக்கொண்டது.