• July 2, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: சாத்​தான்​குளம் சம்​பவம்​போல மடப்​புரத்​தில் மற்​றொரு சம்​பவம் நடை​பெற்​ற​தால் தமிழக மக்​கள் அதிர்ச்​சி​யில் உள்ளனர். தூத்​துக்​குடி மாவட்​டம் சாத் தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராஜ். அவரது மகன் பென்​னிக்​ஸ். செல்​போன் கடை நடத்தி வந்த இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்​கு​வாத பிரச்​சினைக்​காக போலீ​ஸார் காவல்​நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

இரு​வரை​யும் காவல் நிலை​யத்​திலேயே போலீ​ஸார் கொடூர​மாகத் தாக்​கினர். சிறை​யில் அடைக்​கப்​பட்ட 2 பேரும் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தமிழகத்தை அதிர்ச்​சி​யடையச் செய்​தது. தற்​போதைய முதல்​வரும், அப்​போதைய எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், கனி​மொழி மற்​றும் சமூக செயல்​பாட்​டாளர்​கள், திரைப்பட பிரபலங்​கள், கிரிக்​கெட் வீரர்​கள் என பலதரப்​பிலும் கடும்கண்டன குரல்​கள் எழுந்​தன. இதனால் அதி​முக அரசுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *