
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.
இதில் ஆரோக்கியடேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக் குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் பாக் நீரிணை கடல் பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 7 மீனவர்களையும் கைது செய்தனர்.