
சென்னை: திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதை வேடிக்கை பார்ப்பது தான் முதல்வரின் வேலையா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: காவல் துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்துக்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை.
பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை போலீஸார் அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?