
முதல்வரால் மே 30-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு மார்க்கெட் ஒரு மாதம் ஆனபின்பும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மார்க்கெட்டை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே ரூ.7 கோடியில் ராஜாஜி மார்கெட் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்களது தேவைகள் அனைத்துக்கும் மார்க்கெட் செல்வது சிரமம் என்பதால் ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.