
புதுடெல்லி: பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இஎல்ஐ) திட்டம், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம்(ஆர்டிஐ), தேசிய விளையாட்டுக் கொள்கை, தமிழகத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.