
சென்னை: “திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான முன்னெடுப்பை இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.