
மும்பை: மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒலி பெருக்கிகளின் ஒலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மசூதிகளின் பாங்குகளை செயலி மூலம் கைப்பேசிகளில் ஒலிக்கத் துவங்கி உள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து வேளை தொழுவதை தம் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இந்த தொழுகைக்கு சற்று முன்பாக அதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் மசூதிகளில் அசான் என்றழைக்கப்படும் பாங்கு ஓசை ஒலிப்பதும் பல காலமாகத் தொடர்கிறது. இதில், முதல் தொழுகையான விடியலில் சூரிய உதயம் சமயத்திலும் மசூதிகளின் ஒலி பெருக்கி வாயிலாகப் பாங்கு ஒலிக்கப்படுகிறது.