
புதுடெல்லி: பிஹார் கிராமத்தில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்துக்கு இணையாக யாதவர்கள் சமூகம் அதிகம் இருக்கும் மாநிலம் பிஹார். இதன் மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரிலுள்ள திகுலியா கிராமத்தின் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள்’ என எழுதப்பட்டுள்ளது.