
மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சொத்து வரி மட்டுமல்லாது கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு புகார்களும் குவிவதாக தெரிய வந்துள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். இதுவரை விசாரணையில் ஏராளமானோரை விசாரித்துள்ள போலீஸார், அரசியல் பின்புலம் இல்லாத ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர். விசாரணை வளையத்துக்குள் பலர் இருந்தாலும் கைது செய்யவில்லை.