
சென்னை: காதல் மோகத்தின் பேரில் பதியப்படும் போக்சோ வழக்குகளில் இருபாலரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என்றும், தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் காவல் துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவர் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் மற்றும் தருமபுரியில் நடைபெற்ற இளம்வயது திருமணம் போன்ற காதல் மோக வழக்குகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் போலீஸாரால் நடத்தப்பட்ட விதம் குறித்து ஏற்கெனவே கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், சிறார் மீதான போக்சோ வழக்குகளை கையாளுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்து உத்தரவிட்டது.