• July 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காதல் மோகத்​தின் பேரில் பதி​யப்​படும் போக்சோ வழக்​கு​களில் இரு​பாலரும் 18 வயதுக்கு உட்​பட்​ட​வர்​களாக இருந்தால் அவர்​களை கைது செய்து நீதி​மன்ற காவலுக்கு அனுப்​பக் கூடாது என்​றும், தேவையற்ற மருத்​துவ பரிசோதனை​களை மேற்​கொள்​ளக் கூடாது என்​றும் காவல்​ துறை மற்​றும் நீதித்​துறை அதி​காரி​களுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிதம்​பரத்​தில் பள்ளி மாணவி ஒரு​வருக்கு மாணவர் மஞ்​சள் கயிறு கட்​டிய சம்​பவம் மற்​றும் தரு​மபுரி​யில் நடை​பெற்ற இளம்​வயது திரு​மணம் போன்ற காதல் மோக வழக்​கு​களில் 18 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர், சிறுமியர் போலீ​ஸா​ரால் நடத்​தப்​பட்ட விதம் குறித்து ஏற்​கெனவே கண்​டனம் தெரி​வித்த உயர் நீதி​மன்​றம், சிறார் மீதான போக்சோ வழக்​கு​களை கையாளுவதற்​கான நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க நீதிப​தி​கள் என்​.ஆனந்த் வெங்​கடேஷ், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்வை அமைத்து உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *