
திருப்புவனம்: போலீஸார் விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த வழக்கில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைக் கண்டித்தும், தங்களையும் கைது செய்ய வலியுறுத்தியும் காவலர்கள் குடும்பத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார்.