
புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் இதயநோய் மருத்துவர் திரேந்திர சிங்கானியா கூறியதாவது: மாரடைப்பு அபாயத்திற்கு ஸ்டீராய்டுகள், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் (குறிப்பாக பெண்களுக்கு) காரணங்களாக உள்ளன. பிரபலமாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, அனைவரும் உடலுக்கான விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்.