• July 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 3 ஆயிரம் பயணி​களை கையாளும் வகை​யில் சென்னை துறை​முக கப்​பல் முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தும் பணிக்​காக மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் அடிக்​கல் நாட்​டினார். இந்​தி​யா​வில் கப்​பல் போக்​கு​வரத்தை மேம்​படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்​டத்​தின் கீழ் பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் அமைச்​சகம் மேற்​கொண்​டுள்​ளது.

அதன் ஒரு பகு​தி​யாக ஆசிய உறுப்பு நாடு​களு​டன் கப்​பல் போக்​கு​வரத்து சம்​பந்​த​மான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்​னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் துறை அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் நிகழ்ச்​சி​யைத் தொடங்கி வைத்​தார். தொடர்ந்​து, சென்னை துறை​முகத்​தில் 4 புதிய திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *